பொருத்துவமனை புகுந்து நர்சிங் மாணவி கொலை! நாடக காதலன் அரங்கேற்றிய கொடூரம்! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவமனையில், 18 வயது நர்சிங் பயின்று வந்த சந்தியா சவுத்ரி மீது நடந்த கொடூரமான தாக்குதல் பகீரென்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த சந்தியாவை, திடீரென வந்த வாலிபர் ஒருவர் அங்குள்ளே தாக்கினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தபோதும், யாரும் உதவ முன்வரவில்லை.

அதிகமாய் ஆவேசமடைந்த வாலிபர், மகளிர் முன்னிலையில் அவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் பரவியுள்ளது.

தாக்கிய பின்னர், குற்றவாளி தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் திட்டம் வெற்றியடையாததால், அவர் ஆஸ்பத்திரியை விட்டு தப்பிச் சென்றார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்தியாவை கொலை செய்தவர் அவரது முன்னாள் காதலன் அபிஷேக் என தெரியவந்தது.

சந்தியா மற்றும் அபிஷேக் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் ஏற்பட்ட மனமுடைவு காரணமாக அவர்கள் இடைவெளி ஏற்பட்டு, பிரிந்திருந்தனர். இதனைத் தாங்க முடியாத அபிஷேக் பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போது அபிஷேக் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhya Pradesh nursing student boyfriend Murder 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->