மனைவி ஆர்த்தியை பிரிய காரணம் இதுதான்: கெனிஷா ஒரு அழகான துணை : ரவி மோகன் பரபரப்பு அறிக்கை..! - Seithipunal
Seithipunal


நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். தற்போது இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வரை வருவதற்கு பாடகி கெனிஷா உடனான நெருக்கம் தன காரணம் என ஆர்த்தி தரப்பில் இருந்து வைக்கப்பட்ட குற்றசாட்டு. 

இந்த சூழலில் நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும், ஐசரி கணேஷ் இல்ல திருமணத்தில் ஜோடியாக கைகோர்த்து பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதற்கு ரவி மோகனுக்கு எதிராகவும், ஆர்த்திக்கு ஆதரவாக முன்னணி நடிகைகளும் குரல் கொடுத்தனர்.

இந்தநிலையில், மனைவி ஆர்த்தியை பிரிய காரணம் குறித்து நடிகர் ரவி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

இத்தனை வருடங்களாக என்னை முதுகில் குத்தினார்கள். இப்போது என்னை நெஞ்சில் குத்தியதற்காக சந்தோஷப்படுகிறேன். என்னுடைய சார்பில் வரும் இறுதி அறிக்கை இது. பொன் முட்டையிடும் வாத்தாக என்னை எனது மனைவி பயன்படுத்தினார். என்னை கணவராக கூட மதிக்கவில்லை. எனது மாமியாரின் பல கோடி ரூபாய் கடனுக்கு என்னை ஜமீன் தாரராக கடந்த ஆண்டு கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர். 

எனது சொத்துகள், எனது வங்கி கணக்குகள், எனது சமூக ஊடக கணக்குகளை கூட என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. லைவ் ஸ்டைல் என்ற பெயரில் என் மனைவி செய்த மதிப்பிட முடியாத செலவுகள்தான் என் கடன் பிரச்சினைக்கு காரணம்.

கடந்த 5 வருடங்களாக எனது பெற்றோருக்கு ஒரு பைசா கூட பணம் கொடுக்கவிடாமல் தடுத்து வந்தார்கள். முன்னாள் மனைவியை பொருளாதார ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டுவது நகைச்சுவை, அதிர்ச்சி, ஆர்த்தியுடனான எனது திருமண வாழ்க்கையை தொடர எவ்வளவோ முயன்றேன். ஆர்த்தியால் உடல், மனம், மற்றும் உணர்வு ரீதியாக கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன்.

மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல, எனது மகன்கள் இருவரையும் பார்க்கவிடாமல் என்னை தடுத்து வருகின்றனர். பணரீதியாக ஆதாயம் அடைய என் மகன்களை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். ஒரு மனிதனாகவும் தந்தையாகவும் நான் விலகிச்செல்ல எடுத்த வலிகள் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

என்னுடைய வீட்டை விட்டு ஏதுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா பிரான்சிஸ். அவர் ஒரு அழகான துணை. வாழ்க்கையில் சந்தித்த சட்ட, உணர்வு, நிதி ரீதியான எல்லா பிரச்னைகளிலும் என்னுடன் இருந்தவர். என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக இல்லாமல், தோழியாக இருந்து உதவினார்.'' என்று அதில் கூறியுள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ravi Mohan sensational statement is the reason he divorced his wife Aarti


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->