உலக அளவில் வசூல் மழை பொழியும் ஜெயிலர்.. 2 நாட்களில் இத்தனை கோடியா.? - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 2 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. இதில் தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகியது. மேலும் உலகம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியானது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளும் மத்தியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அதன்படி, உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருப்பதால் தென்னிந்தியாவில் நல்ல வசூலை குவித்து வருகிறது. இதில் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் ஜெயிலர் திரைப்படம் 49 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 95 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 56 கோடி ரூபாய் என மொத்தமாக 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஜெயலலிதா திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jailor movie collected 152 crores in 2days


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->