ஏ ஆர் ரகுமானுக்கு பிடிக்காத பாடல், சூப்பர் ஹிட் ஆனது எப்படி???  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் சினிமாவிலும் இந்தியாவின் புகழ் கொடியை பறக்கச் செய்தவர் ஏ ஆர் ரகுமான். தனது முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவர். தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக இசை உலகில் முடி சூடா மன்னனாக வலம் வருபவர்.

வழக்கமான இசையை ரசித்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு  தனது வித்தியாசமான இசையின் மூலம் புதிய உணர்வை கொடுத்தவர் ஏ ஆர் ரகுமான். 90ஸ் காலகட்டங்களில் இவரது பாடல்களுக்கு ஆடாத கால்களே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு இசையால் தமிழ் ரசிகர்களை தாளம் போட வைத்தவர் ஏ ஆர் ரகுமான்.

தற்போது இவரது இசையில்  உருவாகியிருக்கும் பத்து தல  திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்களும் நேற்று வெளியிடப்பட்டன. இத்திரைப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவை பற்றி ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார் ஏ ஆர் ரகுமான்.

இவர்கள் இருவரும் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றி இருந்தனர். அப்போது ஒரு காதல் சிச்சுவேஷனுக்காக ஏ ஆர் ரகுமானிடம் டியூன் கேட்டிருக்கிறார் கிருஷ்ணா. ஏ ஆர் ரகுமானும்  ஒரு பாடலை இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்தப் பாடல் ரஹ்மானுக்கு பிடிக்கவில்லை. இயக்குனர் கிருஷ்ணாவிற்கு பிடித்து விட்டது. அவர் இந்த பாடல் தான் எனக்கு வேண்டும் என ஏ ஆர் ரகுமானிடம் அடம்பிடித்து வாங்கிய பாடல் தான் 'முன்பே வா, என் அன்பே வா' என்ற பாடல். அந்தத் திரைப்படம் வந்து  17 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒரு பாடல் தான்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ar rahman shares an interesting story about director krishna


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->