பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி.!
near pakisthan terrorist and soldier died gun shoot
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, ராணுவ வீரர்கள் உடனடியாக அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடுத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துப்பாக்கி சூடு மேற்கொண்டனர். இதில் பயங்கரவாதி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் அவரிடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தான் உயிரிழந்த பயங்கரவாதி பல பயங்கரவாத செயல்களை நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்றதற்காக ஏற்கனவே போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்று தெரியவந்தது.
இதையடுத்து, ராணுவ அதிகாரிகள் அவரிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை கைப்பற்றினர். பக்துங்வா மாகாணத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near pakisthan terrorist and soldier died gun shoot