விதிமீறி செய்த பண பரிவர்த்தனை - சீன மொபைல் நிறுவனத்துக்கு அமலாக்க துறை நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 2014-ம் ஆண்டு செயல்பட்டு வரும் சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியின் இந்தியப் பிரிவு அந்நிய பரிவர்த்தனையில் விதிகளை மீறியுள்ளதாக கடந்த ஆண்டு அமலாக்கத் துறையினரால் அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

2015-ம் ஆண்டு முதல் அந்நிறுவனம் ரூ.5,551 கோடியை ராயல்டி என்ற பெயரில் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் ஒரு சீன நிறுவனம் என மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது சோதனையில் தெரியவந்ததையடுத்து அந்நிறுவனத்தின் கணக்கில் இருந்து அமலாக்கத்துறை ரூ.5,551 கோடியை பறிமுதல் செய்தது.

மேலும், அந்நிய பரிவர்த்தனை விதிகளை மீறியதாக விளக்கம் கேட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது

ஷாவ்மி நிறுவனம், அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க முடியாது என அம்மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அந்நிறுவனம், பரிமாற்றம் செய்த தொகையில் இருமடங்கு கூடுதலாக அபராதம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Irregular Cash Transactions Enforcement Department Notice to China Mobile Company


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->