வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம்… இன்று சற்று சரிவில்...! இன்றைய விலை நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக தங்கம் விலை அடிக்கடி புதிய உச்சங்களைத் தொட்டு மக்களுக்கு தொடர்ச்சியான அதிர்ச்சியை அளித்து வருகிறது. ஒருபுறம் ஏற்றம், மறுபுறம் சிறு சரிவு என தங்கத்தின் விலை கடும் நிலையற்ற தன்மையை காட்டி வருகிறது.இந்த தொடர் உயர்வால் தங்கம் இன்று ஏழை, நடுத்தர மக்களுக்கு எட்டாத கனியாக மாறியுள்ளது.

குறுகிய கால லாப நம்பிக்கையில் சிலர் கடன் வாங்கி கூட தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.கடந்த 9-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்தையும், சவரன் ரூ.96 ஆயிரத்தையும் கடந்தது.

அதன் பின்னரும் விலை உயர்வு நிற்காமல், 13-ந் தேதி ஒரு சவரன் ரூ.98,960 என்ற உச்சத்தைத் தொட்டது. விடுமுறை காரணமாக ஒரு நாள் மாற்றமின்றி இருந்த தங்கம், அடுத்த நாளே ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனையாகி வரலாறு படைத்தது.

இந்த திடீர் ஏற்றம் இல்லத்தரசிகளையும் நகை வாங்க திட்டமிட்டவர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜிஎஸ்டி, செய்கூலி சேர்த்தால் நகை வாங்குவது கனவாக மாறிய நிலையில், “கையில் இருக்கும் தங்கத்தை பாதுகாத்தாலே லட்சாதிபதி” என்ற மனநிலைக்கு நடுத்தர மக்கள் வந்துள்ளனர்.

ஆனால், இன்று தங்கம் விலையில் சற்று நிம்மதி கிடைத்துள்ளது. கிராமுக்கு ரூ.165, சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு சவரன் ரூ.98,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் சரிவடைந்து, கிராம் ரூ.211, கிலோ ரூ.2.11 லட்சமாக உள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.50 ஆயிரமாக இருந்த ஒரு சவரன் தங்கம், ஒரே ஆண்டுக்குள் ரூ.1 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே ஆண்டில் ரூ.43 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை, நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold which reached all time high falling slightly today What price situation today


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->