இன்னும் ரூ. 6,967 கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகள் மக்களிடம்... மத்திய அரசு சொன்ன செய்தி! - Seithipunal
Seithipunal


ரூ.6,967 கோடி மதிப்பிலான ரூ.2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை என்றும், கடந்த 1ம் தேதி வரை, ரூ.3.48 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன என்றும், இன்று மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிதாக ரூ. 500 மற்றும் ரூ. 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது, 2,000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட நிலையில், இதுவரை 98.04 சதவீதம் நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெற்றதாகவும், ரூ. 6,970 கோடி மதிப்பிலான நோட்டுகள் மக்களிடம் மட்டுமே உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்து இருந்தது.

அந்த தகவலின்படி, மொத்தமாக ரூ. 3.56 லட்சம் கோடி அளவிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்தன. ஆனால், அக். 31, 2023 அன்று ரூ. 6,970 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளில் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, மே 19, 2023 வரை புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 98.04 சதவீதம் திரும்பப் பெற்று உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு மக்களவையில் சொன்ன தகவலின்படி, ரூ.6,967 கோடி மதிப்பிலான ரூ.2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Govt RBI 2000 rupees note


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->