ஒரு சில சாபங்களை தவிர்த்து மற்ற சாபங்களை பற்றி பலருக்கு தெரியாத நிலையில், மொத்தம் உள்ள சாபங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
சாபங்கள் வகைகள்:
1) பெண் சாபம்
2) பிரேத சாபம்
3) பிரம்ம சாபம்
4) சர்ப்ப சாபம
5) பித்ரு சாபம்
6) கோ சாபம்
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்
9) விருட்ச சாபம்
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்
13) குலதெய்வ சாபம்
மேலுள்ள 13 சாபத்தை பற்றியும் அதனால் ஏற்படும் பலன்களை பற்றியும் முழுவதுமாக தெரிந்துகொள்வோம்.
1 )பெண் சாபம் : உங்கள் வம்சமே அழியும்.
* பெண்களை ஏமாற்றுவதால்
* சகோதரிகளை ஆதரிக்காமல் இருந்தால்
* மனைவியை கைவிடுவது - இத்தகையினால் பெண் சாபம் வரும்.
2) பிரேத சாபம் : ஆயுள் குறையும்.
* இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுதல்,
* இறந்தவரின் உடலைத் தாண்டுதல்.
* பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும்,
* இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பது - ஆகியன பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.
3) பிரம்ம சாபம்:ஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
* நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
* வித்தையை தவறாக பயன்படுத்துவது,
* மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது - ஆகியவற்றால் பிரம்ம சாபம் ஏற்படுகிறது.
4) சர்ப்ப சாபம்: கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
* தேவையின்றி பாம்புகளை கொல்வதால்,
* பாம்புகளின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்.
5) பித்ரு சாபம் : ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
* முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும்,
* தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் ,
* வீட்டில் மூத்தவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
6) கோ சாபம்: குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
* பசுவை வதைப்பது,
*பசுவை வெட்டக் கொடுப்பது,
* கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது ,
* தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது ஆகிய காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.
7) பூமி சாபம்: நரகவேதனையைக் கொடுக்கும்.
* ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பது,
* பூமியை பாழ்படுத்துவது,
* பூமியை தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவது,
* அடுத்தவர் பூமியைப் பறிப்பது ஆகியவை பூமி சாபத்தை உண்டாக்கும்.
8) கங்கா சாபம்: எவ்வளவு தோண்டினாலும் கிணற்றில் நீர் கிடைக்காது.
* பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும்,
* ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
9) விருட்ச சாபம்: கடன் மற்றும் நோய் உண்டாகும்.
* பச்சை மரத்தை வெட்டுவதால்,
* கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வது,
* மரத்தை எரிப்பது,
* மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவது ஆகியன விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.
10) தேவ சாபம்: உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
* கடவுளின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது,
* தெய்வங்களை இகழ்வது போன்றவற்றால், தேவ சாபம் ஏற்படும்.
11) ரிஷி சாபம்: வம்சம் அழியும்.
* ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ரிஷி சாபம் ஏற்படும்.
12) முனி சாபம் : செய்வினைக் கோளாறு எற்படும்
* எல்லைதெய்வங்கள், மற்றும் மற்ற தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால்.
13) குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.