கன்னித்தன்மை என்றால் என்ன?.! கன்னிச்சவ்வு கிழிவது ஏன்?.!! வீண் சந்தேகத்தால் உங்களின் வாழ்க்கையே பறிபோகலாம்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்ட நிலையில் பெண்கள் தங்களின் துணையுடன் இணையும் சமயத்தில் பல விதமான கேள்விக்குறிகளுக்கு உள்ளாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆண்களின் சுற்றுப்புற நிலை மற்றும் அவர்கள் வளர்ந்த விதம் என்று பல காரணங்களுக்கு மத்தியில்., அவர்கள் கேள்விப்பட்ட சில நிகழ்வுகளை வைத்து அவர்கள் தங்களின் துணை மீது பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதனை சிலர் தங்களின் துணையுடன் தாம்பத்தியத்திற்கு கூடும் சமயத்தில் கேள்வியை எழுப்பி வீண் சந்தேகத்தை வளர்த்து., அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றனர். 

தாம்பத்தியத்தில் அனைத்து பெண்களுக்கும் இரத்த கசிவானது ஏற்பட்டுவிடாது. இன்னும் கூட பெரும்பாலான நாடுகளில் கன்னி கிழியாமல் இருப்பதற்கு ஒரேயொரு விளக்கமே சிந்திக்க கூட இடமளிக்காத வகையில் நடத்தையில் இருந்து வருகிறது. பெண்ணொருவர் முதல் முறை தனது கணவருடன் உறவு கொள்ளும் சமயத்தில் கன்னித்தன்மையுடன் இருக்க., தாம்பத்தியத்தில் ஆணின் புணர்ச்சியின் போது இரத்தக்கசிவு ஏற்பட்டால் அவள் நல்லவள் என்ற முட்டாள்தனமான நடைமுறையில் வெளியில் கூற முடியாத அளவிற்கு., மன சந்தேகத்தை வளர்த்து தேவையற்ற சிந்தனையை வளர்த்து கொண்டு இருக்கிறது. 

பொதுவாக தாம்பத்தியம் மேற்கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் இரத்த கசிவானது ஏற்படாது. தாம்பத்தியத்தில் இரத்த கசிவு ஏற்படுவதற்கு காரணமாக கன்னிச்சவ்வு விளங்குகிறது. இந்த சவ்வானது பெண்ணுறுப்பின் திறப்பு பகுதியில் உள்ள மென்மையான திசுவேயாகும். இந்த திசுவானது அதாவது கன்னிச்சவ்வு ஓடுதல்., குதித்தல்., சைக்கிள் ஓட்டுதல்., நீச்சல் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் கீழும் வாய்ப்புகள் இயற்கையாக நிகழ்ந்துவிடும். இதனை அறியாத சில நபர்கள் மற்றும் வீண் நண்பர்களுக்கு மத்தியில் புழங்கிய நண்பர்கள் மனைவியின் மீது தேவையற்ற சந்தேகத்தை தாம்பத்திய நேரத்தில் எழுப்புவது முட்டாள் தனமான ஒன்றாகும். 

இருவருக்கும் கன்னித்தன்மையானது இல்லை என்றால் அது உங்களின் செயல்பாடை மட்டுமே குறிக்கிறது. தாம்பத்தியம் என்பது இருவரும் மனதளவில் ஏற்றுக்கொண்டு., உடலளவில் பணிகளை மேற்கொள்வதாகும். இந்த சமயத்தில்., உங்களின் துணைக்கு பிடித்த விஷயத்தை கூறுவதற்கு சில காலம் ஆனாலும்., இருவரும் துணையின் விருப்பத்தை அறிந்து செயலாற்றினால் மட்டுமே தாம்பத்தியத்தில் உச்சத்தை அடைய இயலும். நீங்கள் எழுப்பும் கேள்வியானது பெண்களை பொம்மை போல மாற்றி., முதல் நாளே சந்தேகத்திற்கு ஆளாகுகிறான்... இவனுக்கு என்ன செய்வது என்று பொம்மை போல மாற நீங்களே வழியை உருவாக்கிவிடாதீர்கள். 

விரைவில் உச்சம் அடைய வேண்டும் என்று எண்ணி அதிவேகத்துடன் தாம்பத்தியத்தை மேற்கொள்ளாதீர்கள். இந்த சமயத்தில் உங்களின் துணையுடன் சில மேல் விளையாட்டுகள் நடைபெற்றால் மட்டுமே தாம்பத்தியத்தில் வலியை குறைக்கும் திரவமானது பெண்ணுறுப்பிற்குள் சுரக்கும். எடுத்தோம் முடித்தோம் என்று விரைவை நீங்கள் நாடினால் பெண்ணானவள் வலியால் அலறுவது மட்டுமே ஏற்படும். உங்களுக்கு வலியில்லாமல் நீங்கள் இன்பத்தில் திகைத்தாலும்., உங்கள் துணையின் முகத்தில் வலிக்கான அறிகுறியும்., எரிச்சலும் கண்ணீராக வெளிவரும். இந்த சமயத்தில் பெண்ணுறுப்பானது வறண்டிருக்கும் பட்சத்தில் அதிகளவு வலி ஏற்படும். எந்த நேரத்திலும் துணைகள் தனது துணையின் மீது நம்பிக்கையை வைத்திருப்பதே ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

what is Virginity how kannichavu got damage before damage know about truth


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->