உக்ரைன் மீது ரஷியா சரமாரியான ஏவுகணை, டிரோன் தாக்குதல்! - Seithipunal
Seithipunal


ரஷியா, நள்ளிரவில் உக்ரைன் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை ஏவியது. இந்தப் பேர்தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து, பலர் படுகாயமடைந்துள்ளனர்.

2022-ஆம் ஆண்டு தொடங்கிய போரில் இது வரை உக்ரைனில் நடக்காத அளவிலான பெரிய தாக்குதல் என்று உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறினார்.

உக்ரைனின் தலைநகர் கீவில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 16 பேர் காயமடைந்தனர். விழுந்த டிரோன் பாகங்கள் குடியிருப்புகள் மற்றும் தங்குமிடங்களை சேதப்படுத்தியது. சைட்டோமிர் பகுதியில் 8, 12 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறார்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

க்மெல்னிட்ஸ்கி நகரில் நான்கு பேர், மைக்கோலைவிலொரு நபர் மரணமடைந்தனர். பல இடங்களில் தீவிபத்து ஏற்பட்டு, மார்கலிவ்கா கிராமத்தில் வீடுகள் முற்றாக இடிந்துவிட்டன.

இத்தாக்குதலால் அதிர்ந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷியா மீது தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். “சாதாரண குடியிருப்புகள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட மிருகத்தனத் தாக்குதலுக்கு, வலுவான சர்வதேச அழுத்தமே ஒரே பதிலாகும்,” என்ற அவர், ரஷியாவை எதிர்த்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine Russia drone attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->