கனடாவில் மர்ம நபர்கள் அட்டூழியம்; அப்பாவி இந்தியர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொலை..! - Seithipunal
Seithipunal


கனடாவின் தென்கிழக்கு எட்மண்டனில், பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு இந்திய வம்சாவளி இளைஞர்கள், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள், இறந்தவர்கள் பஞ்சாபின் மான்சாவில் உள்ள உத்தத் சைதேவாலா கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் ரன்வீர் சிங் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரண்டு இளைஞர்களும், தொழில் வாய்ப்புகளைத் தேடி தனித்தனியாக கனடாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் வேலை தேடி வந்துள்ளனர். இவர்கள் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது.

எட்மண்டன் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கனடா போலீசார் வேறு சில பஞ்சாப் இளைஞர்களை சுற்றி வளைத்து இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two Indians were shot dead in an attack carried out by unknown assailants in Canada


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->