எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு.!! - Seithipunal
Seithipunal


உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஏற்கெனவே டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் ஆகிய நிறுவனங்களில் நடத்தி வருகிறார். இதனுடைய அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க கடந்த பல நாட்களாக பேசப்பட்டு, சில மாதங்களுக்கு முன்னர் அதை வாங்குவதற்காக ஒப்பந்தத்தை போட்டார். 

இதையடுத்து,  ட்விட்டர் நிறுவனத்தின் 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக அறிவித்தார். இது குறித்து ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் எலான் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, ட்விட்டரில் டைப் செய்யும் எழுத்துக்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு கைவிடப்பட்டதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு எலான் மஸ்க் நிறுவனம் சரியான பதிலை அளிக்க தவறியதால், 44 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 44 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மீறியதாக எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twitter company case file against Elon Musk


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->