பாகிஸ்தானில் பதற்றம்! ஸ்வாட் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 18 பேர்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பலி...!
Tension in Pakistan 18 people swept away in Swat River All from the same family killed
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள ஸ்வாட் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இது கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் இழுத்துச் செல்லப்பட்டனர். மேலும், மீட்புப் படையினர் 5 வெவ்வேறு இடங்களில் அவர்களை தேடிவருகின்றனர்.
இந்நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் மற்றவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக 18 பேரில் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.
இந்த ஸ்வாட் ஆறு, பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வற்றாத நதிகளில் ஒன்றாகும்.
English Summary
Tension in Pakistan 18 people swept away in Swat River All from the same family killed