திருநெல்வேலியில் கொலை முயற்சி மற்றும் கொள்ளை சம்பவம்: குண்டர் சட்டத்தில் இரண்டு வாலிபர்கள் கைது..! - Seithipunal
Seithipunal


கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், மேலகாடுவெட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் வான்பாண்டி (வயது 24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார்(26) ஆகிய இருவரும் திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை, கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நெல்லை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் 02 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின் பேரில், வானுபாண்டி, பிரவீன்குமார் ஆகிய இரண்டு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two youths arrested under the Gangster Act in connection with an attempt to murder and robbery case in Tirunelveli


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->