கடவுளை விட பெரியவரா..? சமத்துவத்துக்கு எதிரான கோவில் விழாக்களில் முதல் மரியாதை நடைமுறைகளை நிறுத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம், பர்கூர் கிராமத்தில் பந்தீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் நடத்தப்படும் மகா பெரிய குண்டம் விழாவில், தனக்கு முதல் மரியாதை வழங்க கோரி, தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கோவில் வழக்கப்படி எனது குடும்பத்தினர் தலைமையில் சாமி ஊர்வலம் நடத்தப்படும் என்றும், எங்கள் குடும்பத்தினருக்குத்தான் முதல் மரியாதை வழங்கப்படும் என்றும், அந்த வகையில் கோவிலின் முதல் மரியாதை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் வந்தது. அப்போது நீதிபதி, 'பல கோவில் விழாக்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட காரணமே, முதல் மரியாதை தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இது, விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூகத்தில் இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம் என்று தெரிவித்துள்ளார். கோவில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் என்றும் அதிரடியாக கூறியுள்ளார். சின்ஹா வழக்கு விசாரணை முடிவில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை முடித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras High Court orders end to first respect practices at temple festivals that are against equality


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->