INDvsAUS: 33 வது சதத்தை விலகிய ரோஹித் ஷர்மா!
INDvsAUS rohit 100
சிட்னியில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா இன்னிங்ஸ் தொடங்கியவுடன் சுப்மன் கில் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி களமிறங்கினர். தொடக்கம் முதலே ரோகித் சர்மா தன்னுடைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடினார்.
அவர் 63 பந்தில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து அரைசதம் எட்டினார். இது அவரது ஒருநாள் வாழ்க்கையின் 60ஆவது அரைசதமாகும். மறுபுறம் கோலி 56 பந்தில் 4 பவுண்டரிகளுடன் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
இருவரும் சேர்ந்து 100 ரன்களை கடந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் ரோகித்-கோலி ஜோடி முதல்முறையாக 100 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பு இந்தியாவின் இன்னிங்ஸை தளர்ச்சி இல்லாமல் முன்னேற்றியது.
தொடர்ந்து ரோகித் சர்மா தன் ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி, 105 பந்தில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடித்து சிறப்பான சதத்தைப் பதிவு செய்தார். இது அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் 33ஆவது சதமாகும்.
முன்னைய ஆட்டத்தில் அரைசதம் அடித்த ரோகித், இம்முறை சதம் அடித்து தனது சிறந்த ஆட்டத்தைத் தொடர்ந்துள்ளார். அவரின் இன்னிங்ஸ் இந்தியாவை வெற்றிக்கே வழிநடத்தும் வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.