பிரான்சில் கொட்டி தீர்த்த கனமழை.! நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள் - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக கடும் வெப்ப அலை மற்றும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பிரான்சில், புதன்கிழமை புயல் காற்றுடன் கனமழை பெய்தது.

ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதால் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுரங்க பாதைகள், தெருக்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில் பாரிஸ் தெற்கு பகுதியில் முழங்கால் வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக பிரான்சின் செய்ன் ஆற்றின் நீர்மட்டம் 35 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Subway submerged in France due to heavy rain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->