தொடர்ந்து ஏவுகணை, பீரங்கி பயிற்சியில் ஈடுபடும் வடகொரியா.! எதிர்ப்பு தெரிவித்து தென்கொரியா கண்டனம்.!
South Korea condemns as north Korea practices tank exercise
அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டதையடுத்து வடகொரியா தனது எல்லைப் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. மேலும் கடந்த 2 வாரத்தில் மட்டும் 8 முறை ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
இந்நிலையில் வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியா ஹோகு என்ற வருடாந்திர ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது.
ஆனால் தென்கொரியா ராணுவம் பயிற்சியை தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, வட கொரியா மீண்டும் அதன் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது.
மேற்கு கடற்கரையில் 100 குண்டுகள் வீசப்பட்டதாகவும், கிழக்கு கடற்கரையில் 150 குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து வடகொரியாவின் இந்த நடவடிக்கை 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறும் செயல் என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.
மேலும் வடகொரியாவின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
English Summary
South Korea condemns as north Korea practices tank exercise