பரிதாப நிலையில் சாம்சங்...! சம்பள உயர்வு வேண்டி ஊழியர்கள் போராட்ட எச்சரிக்கை...! - 18 நாள் வேலைநிறுத்த அறிவிப்பால் பரபரப்பு...!
Samsung sorry state Employees warn strike demanding salary hike 18 day strike announcement creates excitement
தென்கொரியாவில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரம் ஊழியர்கள், ஊதிய உயர்வு மற்றும் உரிய போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, 18 நாட்கள் நீடிக்கும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றத்தால், சாம்சங் நிறுவனம் அண்மைக்காலத்தில் கணிசமான லாபத்தை குவித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மட்டும் சுமார் ரூ.3.2 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த பெரும் லாபத்தில் தங்களின் உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கவில்லை என்பது ஊழியர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
“போனஸ் வழங்கலில் வெளிப்படைத்தன்மை தேவை”, “உச்சவரம்பு கட்டுப்பாடுகளை நீக்கு” போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, காவலர்கள் பாதுகாப்பையும் மீறி ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.மேலும், போட்டி நிறுவனமான எஸ்.கே. ஹைனிக்ஸ் தனது ஊழியர்களுக்கு வழங்கிய அதிகளவிலான போனஸ், சாம்சங் ஊழியர்களிடையே அதிருப்தியை தீவிரப்படுத்தியுள்ளது.
ஒரே அளவு அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்குள், ஹைனிக்ஸ் நிறுவனத்தில் மூன்று மடங்கு கூடுதல் போனஸ் வழங்கப்படுவது குறித்து அவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தற்போது 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழிற்சங்கத்தில் இணைந்துள்ளதால், சாம்சங் நிர்வாகம் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது.
அடிப்படை ஊதியத்தில் 7 சதவீத உயர்வும், நிறுவன லாபத்தில் 15 சதவீதத்தை போனஸாக வழங்கவும் வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.பேச்சுவார்த்தைகள் பலனின்றி முடிந்தால், வரும் மே 21ஆம் தேதி முதல் மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என தொழிற்சங்கத் தலைவர் சோய் சியுங்-ஹோ எச்சரித்துள்ளார்.
ஒரு நாள் வேலைநிறுத்தம் கூட நிறுவனத்திற்கு சுமார் ரூ.5,600 கோடி இழப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைநிறுத்தம் தீவிரமடைந்தால், உலகளாவிய அளவில் செல்போன்கள் மற்றும் கணினிகளுக்குத் தேவையான சிப் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம்.
இதன் விளைவாக சிப் விலை உயர்ந்து, மின்னணு சாதனங்களின் விலையும் அதிகரிக்கும் சூழல் உருவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்தப் போராட்டம் நீடித்தால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்படும் அபாயம் உள்ளதால், சமரச முயற்சிகள் மூலம் தீர்வு காண நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Samsung sorry state Employees warn strike demanding salary hike 18 day strike announcement creates excitement