மீண்டும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷியா! - Seithipunal
Seithipunal


உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றி உள்ள நிலையில்வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள யப்லுனிவ்கா கிராமத்தை கைப்பற்றியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்றதால் 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தப்போரில் பலர் கொல்லப்பட்டனர்,ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதுடன் பலத்த சேதமும் ஏற்பட்டன.இருதரப்பும் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருவதால் பதற்றம் நிலவிவருகிறது.எனினும் உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றி தொடக்கம் முதல் ரஷியாவின் கையே ஓங்கி உள்ளது.

இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவியை வழங்கின. எனவே போரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனை நடத்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடினர். அதன்பிறகு அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், போரை நிறுத்தாவிட்டால் ரஷியா மீதான பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷிய அதிபர் புதின் ஒப்புக்கொண்டதன்படி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள்  பேச்சுவார்த்தை முடியும் வரை தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு உக்ரைன் வலியுறுத்தியது. ஆனால் ரஷிய அதிபர் புதின் அதனை நிராகரித்தார்.ஏற்கனவே உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றி உள்ள நிலையில்வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள யப்லுனிவ்கா கிராமத்தை கைப்பற்றியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia has captured a village again


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->