பிரதமராக பதவியேற்றவுடன் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம் எழுதிய ரணில் விக்கிரமசிங்கே.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் காரணமாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து, அடுத்த ஒரு வாரத்தில் புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருந்தார்.

அதற்கான அரசியல் திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் ஆவதற்கு விருப்பம் தெரிவிக்க, ஐக்கிய தேசிய கட்சி தலைவராவன ரனில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக நேற்று முன் தினம் மாலை பொறுப்பேற்று கொண்டார்.  

இந்நிலையில், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடிதம் எழுத்து உள்ளார். அந்த கடிதத்தில் கட்சி பேதமின்றி தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இணைந்து பணியாற்ற முன்வருமாறும் கோரிக்கை  விடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ranil Wickremesinghe letter


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->