'தமிழ் இலக்கியம் இறவா தன்மை கொண்டது; உலகிற்கு இந்தியா அளித்த கொடை தமிழ் மொழி'; மலேசியாவில் பிரதமர் மோடி புகழாரம்..! - Seithipunal
Seithipunal


அரசு முறைப் பயணமாக  பிரதமர் நரேந்திர மோடி, இன்று மலேசியா சென்றுள்ளார். அங்கு கோலாலம்பூரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: நம்பிக்கை தான் இந்தியாவின் மிகப்பெரிய கரன்சியாக மாறியுள்ளது என்றும், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, இது உலகம் நம் நாட்டின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறிக்கிறதாகவும், இந்தியாவின் வெற்றி மலேசியா மற்றும் ஆசியாவிற்கும் ஒரு வெற்றி என்று மோடி பேசியுள்ளார்.
அத்துடன், உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா. இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு புலம்பெயர்ந்தோர் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வலுவான பாலமாக நிற்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தமிழ் சமூகம் இங்கு பல நூற்றாண்டுகளாக தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றதாகவும், தமிழ் மொழி, உலகிற்கு இந்தியா அளித்த கொடை என்று பெருமையாக பேசியுள்ளார். மேலும், தமிழ் இலக்கியம் இறவா தன்மை கொண்டது என்றும், தமிழ் கலரச்சாரம் உலகலாவியது. தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனித குலத்துக்கு சேவை செய்கின்றனர் என்று பிரதம மோடி பேசியுள்ளார்.

இதேவேளை, மலாயா பல்கலைக்கழகத்தில் ஒரு திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த விரைவில் ஒரு திருவள்ளுவர் மையமும்அமைக்கப்படும்  என்று உறுதியளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பிரதமர் மோடி மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அத்துடன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இப்போது மலேசியாவிலும் இந்தியாவின் UPI பணபரிமாற்ற முறையை தொடங்க முடிவு எட்டப்பட்டது. விரைவில் மலேசியாவில் UPI சேவைகள் தொடங்கும் என மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi speaking in Malaysia said that the Tamil language is a gift that India has given to the world


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->