மின் பற்றாக்குறை: காஸா மருத்துவமனையில் தொடர் உயிரிழப்பு! சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கடந்த 2 நாட்களாக காசா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக 24 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த 42 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது வான்வழி, கடல் வழி, தரைவழி போன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவில் உள்ள மருத்துவமனையை மூன்றாவது நாளாக ஆக்கிரமித்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தினர் மருத்துவமனை வளாகத்தில் மறைந்துள்ள ஹமாஸ் படையினரை தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர். 

மேலும் மருத்துவமனையில் உள்ள ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதற்காக முற்றுகையிட்டு உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

ஆனால் காசா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்காக இஸ்ரேல் ராணுவம், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்று 2 எரிபொருள் வாகனங்களை காஸாவினுள் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power shortage Gaza hospital continues die 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->