பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : ஒருவர் பலி - 6 பேர் காயம்.!
police officer died for sucide blast bomb attack in pakisthan
நேற்று பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்த நிலையில், நான்கு போலீசார் மற்றும் இரண்டு பொதுமக்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் உயர் அலுவலகங்கள் அமைந்துள்ள அரசு கட்டிடங்களுக்கு செல்லும் சாலையில் காவல் தலைமையகத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை விரைந்து சென்றது. இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பிற்கான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை.
இந்த குண்டுவெடிப்பின்போது, வழக்கமான சோதனைக்காக போலீஸ் அதிகாரிகள் ஒரு டாக்ஸியை நிறுத்தியபோது காரில் இருந்த நபர் ஒருவர் குண்டை வெடிக்கச்செய்துள்ளதாக இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
police officer died for sucide blast bomb attack in pakisthan