அமெரிக்கா || ஒரே வீட்டில் தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம்.! போலீசார் தீவிர விசாரணை - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் ஓக்லஹோமா மாகாணத்தின் துல்சா பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துல்சாவின் புறநகர் பகுதியான புரோக்கன் ஏர்ரோ பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அந்த வீட்டில் இரண்டு பெரியவர்கள் மற்றும் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் வசித்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் தீ விபத்திற்கு முன் அந்த வீட்டிற்கு முன்பாக இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பேச்சு மூச்சற்ற பெண்ணை வீட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் இந்த தீ விபத்து குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigating that 8 died in fire accident in Oklahoma


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->