ஆமதாபாத் விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அவரது சசோதரன்..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) என்ற விமானம், புறப்பட்ட 05 நிமிடங்களில், மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த விமானம் மருத்துவமனை ஹாஸ்டலில் பயங்கரமாக மோதியதில் ஹாஸ்டலில் பயிற்சி மருத்துவர்கள் சாப்பிடும் இடம் சேதம் அடைந்துள்ளது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மருத்துவ மாணவர்கள் விடுதியில் விமானம் மோதியதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குடியிருப்பு பகுதியில் பலர் படுகாயமைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இரங்கல் தெரிவித்த்துள்ளனர்.

ஷெபாஸ் ஷெரீப் தனது இரங்கல் செய்தியில் "இன்று அகமதாபாத் அருகே நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த மிகப்பெரிய இழப்பால் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து அவரது சகோதரனான நவாஸ் ஷெரீப் குறிப்பிடுகையில், "அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரழிவு இழப்பு எல்லைகளைக் கடந்து, நமது பகிரப்பட்ட மனிதநேயத்தை நினைவூட்டுகிறது. பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistani PM and his brother express condolences to the families of the victims of the Ahmedabad plane crash


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->