பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணை மூலம் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியது: ஒப்புக் கொண்டுள்ள பாகிஸ்தான்..!
Pakistan Prime Minister admits that India attacked air force bases with missiles including Brahmos
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவை மீது ட்ரோன்கள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், இந்தியா அதனை முறியடித்தது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தானின் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த பாகிஸ்தான், போரை நிறுத்தும்படி இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ.,விடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்காலிக போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது தங்கள் நாட்டு விமானப்படை தளங்கள் மீது பிரமோஸ் ஏவுகணை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டுள்ளார்.
அனால் அப்போது இந்த மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள், ராணுவத்தினர் பொய் பிரசாரங்களை அவிழ்த்து விட்டனர். பொய்யை உண்மையாக்க வேண்டும் என்பதற்காக ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. அத்துடன், இந்தியாவின் விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், இந்தியா அதற்கான ஆதாரங்களை மேற்க்கோள் காட்டி முறியடித்தது.

இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மே 09 -10-ஆம் தேதி இரவுகளில் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என முடிவு செய்தோம். காலை 04:30 மணிக்கு பிறகு தொழுகைக்கு பிறகு தாக்குதல் நடத்துவது என படைகள் தயாராகி வந்தன.
ஆனால், அதற்கு முன்னர், பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ராவல்பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அதிகாலை என்னிடம் தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Pakistan Prime Minister admits that India attacked air force bases with missiles including Brahmos