பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 57ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


நேற்று பாகிஸ்தான் பெஷாவர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரின் கிஸ்ஸா குவானி என்ற மார்க்கெட் பகுதியில் உள்ள மசூதியில் வழக்கமாக தொழுகை நடைபெறும், நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகைக்கு அதிகமானோர் வந்திருந்தனர். இந்த தொழுகையின் போது திடீரென அங்கு சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 30 பேர் உயிரிழந்ததாக கூறிய நிலையில், தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இது ஒரு தற்கொலை தாக்குதல் என பெஷாவர் காவல்துறை அதிகாரி ஹரூன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan bomb blast 57 person death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->