இனி கனடாவுடன் பேச்சு இல்லை : டிரம்ப் திட்டவட்டம்!
No more talks with Canada Trump declares
கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார் ,அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார், அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அமெரிக்க மீது அதிருப்திய அடைந்தனர்.இதையடுத்து வரிகளை குறைத்து கொண்டார் டொனால்ட் டிரம்ப்.
இந்தநிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் டிரம்ப் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார்.அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கும் வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூட பேசி அந்நாட்டை டிரம்ப் சீண்டியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த டிரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
English Summary
No more talks with Canada Trump declares