நேபாளத்தில் அதிர்ச்சி சம்பவம் - பிரதமரின் அதிகார பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக்.! - Seithipunal
Seithipunal


இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு தனி நாடு நேபாளம். இந்த நாட்டின் பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தாஹல். இவருக்கு என்று ஒரு அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு உள்ளது. இந்த ட்விட்டர் கணக்கின் பெயர் பிஎம் நேபாளம். இந்த நிலையில், இன்று இந்த டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

இதனால், நேபாள பிரதமரின் டுவிட்டர் கணக்கீழ் உள்ள முகப்பு புகைப்படம் மற்றும் முகப்பு முன்னுரை உள்ளிட்ட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, நேபாள பிரதமரின் முகப்பு பக்கத்தில் புரோபைல் புகைப்படமாக புஷ்ப கமல் தாஹல் புகைப்படம் இருந்துள்ளது. 

அந்த படம் ஹேக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது. இதையறிந்த அதிகாரிகள் நேபாள பிரதமரின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தது யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து, நீபல பிரதமரின் ஹேக் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மீட்கும் நடவடிக்கையில் நீபால அதிகாரிகள் மிக்கது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nepal prime minister twitter account hack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->