விமான விபத்து : நேபாள பிரதமர் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு.! - Seithipunal
Seithipunal


விமான விபத்து தொடர்பாக நேபாள பிரதமர் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 68 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் என 72 பேருடன் நேற்று காலை 10:33 மணிக்கு புறப்பட்ட விமானம் காஸ்கி மாவட்டத்தின் பொக்காராவில் தரையிறங்கும்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து மீட்பு குழுவினர் இந்த விபத்தில் உயிரிழந்த 5 இந்தியர்கள் உட்பட 68 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். இந்நிலையில் விமான விபத்து தொடர்பாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தகால், அமைச்சராவை அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் நாட்டின் உள்துறை அமைச்சகம், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepal PM calls emergency Cabinet meeting following plane crash


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->