மெக்சிகோவில் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து.. 16 அகதிகள் பலி‌.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோ நாட்டில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 16 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

மெக்ஸிகோ நாட்டின் மத்திய மாகாணமான பியூப்லாவில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பேருந்தை பின் தொடர்ந்து வந்த லாரி, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னே சென்று கொண்டிருந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில், அகதிகளை ஏற்றி சென்ற பேருந்து சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mexico Bus lorry accident 16 refugees death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->