சிவப்பு நிற உடையணிய போகின்றீர்களா?.! உஷார்.!! நிஜத்தில் ஒரு ராட்சசன் கிறிஸ்டோபர்!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான ராட்சசன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் இருக்கும் சைக்கோ கில்லர் கிறிஸ்டோபர் கதாபாத்திரமானது மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியது. அதே போல சம்பவம் ஒன்று சீனாவில் நடைபெற்றுள்ளது.  

சீனாவில் உள்ள கசூங் பகுதியை சார்ந்தவர் கயோ செங் யாங் (54)., இவர் அங்குள்ள மளிகை கடையில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய சிறுமி உட்பட 11 பெண்களை பலவந்தமாக கற்பழித்துள்ளார். 

மேலும்., அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர் யார் என்று தெரியாமல் காவல் துறையினர் விழிபிதுங்கி பல தேடுதல் வேட்டைகளுக்கு பின்னர் அவரை கைது செய்தனர். 

இவரின் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சமர்ப்பித்தனர். இந்நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தனர்.

இவர் செய்த செயலுக்கான பரிசாக நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த காவல் துறையினர் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அனைத்தும் 1988 ம் வருடம் முதல் 2002 ம் வருடம் வரை நடந்த கொலைகளாகும். 

மேலும்., இந்த நபர் சிவப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்த பெண்களை குறிவைத்து கற்பழித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

like a ratsasan movie killer in china


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->