ஒப்படைப்பு! சபரிமலை கோவிலில் காணாமல் போன பக்தர்களின் 102 செல்போன்கள் மீட்பு...!
Handover 102 cell phones of devotees missing from Sabarimala temple recovered
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இதில் குறிப்பாக மண்டல மகர விளக்கு சீசன் காலங்களில் பக்தர்களில் வருகை அதிக அளவில் இருக்கும்.

இந்நிலையில் கூட்ட நெரிசல் உள்பட பல்வேறு காரணங்களால், பக்தர்கள் சிலர் சில நேரங்களில் தங்களது கைபேசி மற்றும் உடைமைகளை தவற விடுவது வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில் கடந்த மண்டல சீசன் முதல் இதுவரை ஐயப்ப பக்தர்களின் 230 கைபேசிகள் காணாமல் போனதாக, பம்பை காவலில் புகார் பெறப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொலைந்து போன கைப்பேசிகளை மீட்க பம்பை காவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அவ்வகையில் இதுவரை 102 கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது.
அந்த கைப்பேசிகளை கொரியர் மூலம் உரியவர்களுக்கு அனுப்பி வைக்க பம்பை காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இது தற்போது வரவேற்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
English Summary
Handover 102 cell phones of devotees missing from Sabarimala temple recovered