காயிதேமில்லத் அரசு பள்ளி மாணவர்ளுக்கு இலவச சைக்கிள் :எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்! - Seithipunal
Seithipunal


வில்லியனூர் தொகுதிகுட்பட்ட சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேனிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்ளுக்கு இலவச சைக்கிள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்!

புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலை பள்ளி பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு சார்பில் வருடம் தோறும் இலவச மிதி வண்டிகளை வழங்கி வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச மிதிவண்டிகள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வில்லியனூர் தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வில்லியனூர் தொகுதிகுட்பட்ட சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேனிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு 72 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி, வாழ்த்தி பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free bicycles for the students of Kayithamil Government School Opponent party leader Shiva provided


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->