பாதுகாப்புக்காக இன்று முதல் 12 நாட்டு மக்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை! - டிரம்ப்
Trump bans entry to US from 12 countries starting today for security reasons
கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இவர் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் எதிர்பாராதவகையில் பல்வேறு நாடுகளுக்கு அதிரடியாக வர்த்தக வரியை உயர்த்தினார்.

மேலும், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார். அதேசமயம், சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் பணியின்போது வன்முறை சம்பவங்களும் அமெரிக்காவில் அரங்கேறி வருகின்றன.
இந்த சூழலில், 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார். இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுக்குள் நுழைய ஆப்கானிஸ்தான், எக்குவடோரிய கினி,சூடான்,மியான்மர், சாட், காங்கோ, எரித்திரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியேரா லியோனிக், டோகோ, துருக்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
English Summary
Trump bans entry to US from 12 countries starting today for security reasons