அத்தையுடன் கள்ளத்தொடர்பு: மாமாவை தீர்த்துக்கட்டிய மருமகன்! - Seithipunal
Seithipunal



 அத்தையுடனான  கள்ளக்காதலை கண்டித்த மாமாவை வாலிபர் ஒருவர் தீர்த்துக்கட்டி உடலை குப்பையில் போட்டு எரித்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா கமசாகரா கிராமத்தைச் சேர்ந்த  தையல்காரர் சுப்பிரமணியா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். 62 வயதான  தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கடூர் போலீசில் சுப்பிரமணியாவின் மனைவி மீனாட்சி புகார் அளித்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கிராமத்தையொட்டிய குப்பை கொட்டும் இடத்தில் ஒரு ஆண் பிணம் ஒன்று  எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.அந்த ஆண் பிணத்தின் மீது மரக்கட்டைகளை வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆண் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அது மாயமான சுப்பிரமணியா என்பது தெரியவந்தது. 

மேலும் இதுபற்றி சுப்பிரமணியாவின் மனைவி மீனாட்சியையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது மீனாட்சிக்கும், அவரது வீட்டில் கட்டிட பணிகளை மேற்கொள்ள வந்த சுப்பிரமணியாவின் தங்கையின் மகன் பிரதீப் ஆச்சாரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  தனக்கு மீனாட்சி அத்தை உறவுமுறை என்பதால் பிரதீப் ஆச்சாரி நெருங்கி பழகினார். ஒரு கட்டத்தில் இவர்களது பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் சுப்பிரமணியாவுக்கு தெரியவர இருவரையும் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் ஆச்சாரியும், மீனாட்சியும்   சுப்பிரமணியாவை கொலை செய்துவிட்டால் நாம் சந்தோஷமாக வாழலாம் என்று முடிவு செய்தனர். அதன்பேரில் பிரதீப் ஆச்சாரி கூலிப்படையைச் சேர்ந்த சித்தேஷ், விஷ்வாஷ்ஆகியோருக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து சுப்பிரமணியாவை காரில் தனியாக அழைத்து வந்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர் அவரது உடலை குப்பையில் போட்டு மரக்கட்டைகளை உடல் மீது அடுக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் பிரதீப் ஆச்சாரி, சித்தேஷ், விஷ்வாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An illicit relationship with the mother in law The son in law who tied up the uncle


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->