இன்றுடன் நிறைவடைந்தது...! மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல்...!
It ended today Filing of nominations for the Rajya Sabha elections
பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களாக தற்போது இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.அவ்வகையில் இம்மாதம் (ஜூன்) 19-ந்தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.இதில் கடந்த 6-ந்தேதி,தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோல, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது.
இதையடுத்து நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.இதில் வருகிற 12-ந்தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு போட்டியிருந்தால் வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
It ended today Filing of nominations for the Rajya Sabha elections