சனாதனத்தின் சதி! தமிழை ஆயிரம் ஆண்டுக்குள் அடக்குவது தான் அவர்களின் அரசியல்...! - சு. வெங்கடேசன் - Seithipunal
Seithipunal


தமிழக மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் ''அமித் ஷா'' அங்கு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, "முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது. ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும்" என்று விமர்சனம் செய்திருந்தார்.

அந்தக் கூட்டத்தில் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவரது பதிவில் குறிப்பிட்டதாவது, "1000 ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை" என்கிறார் அமித்ஷா.

பரங்குன்றம் என்பது 3000 ஆண்டு பழமையான தமிழ் சொல். அதனை 1000  ஆண்டு என சுருக்குவதில் தான் சனாதனத்தின் சதி இருக்கிறது.இதில் சமஸ்கிருதத்தை பல்லாயிரம் ஆண்டு என்று சொல்லிக்கொண்டே தமிழை 1000  ஆண்டுக்குள் அடக்குவது தான் கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல்" என்று பதிவிட்டுள்ளார்.இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

conspiracy Sanatana Their policy is to suppress Tamil within a thousand years S Venkatesan


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->