ஜப்பான் நிலநடுக்கம்: 126 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!பனிப்பொழிவால் தவிக்கும் மீட்பு குழு! - Seithipunal
Seithipunal


ஜப்பான், மேற்கு மாகாணத்தில் புத்தாண்டு தினத்தன்று வஜிமா நகரை மயமாகக் கொண்டு 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டது. 

நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. ஜப்பானில் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து தர மட்டமாகின.

இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். இந்நிலையில் நிலநடுக்கத்தினால் இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் 560 பேர் காயமடைந்துள்ளனர். 222 பேர் மாயமாகியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் மட்டும் 1170 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்பு படையினர் பணியை தொடர முடியாமல் தவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

japan earthquakes 126 kill people Rescue suffering snow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->