'ஈரான் ஆட்சியாளர் கமேனி பதவி விலகுங்கள்; உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நியாயமான சட்ட விசாரணை உறுதி செய்யப்படும்': பட்டத்து இளவரசர் உறுதி..!
Irans Crown Prince vows fair legal trial for Khamenei if he steps down
1979-ஆம் ஆண்டு ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடந்தது. அப்போது அயதுல்லா கொமேனி ஆட்சியை கைப்பற்றினார். அதற்கு முன் ஈரானை ஆட்சி செய்து வந்த ஈரான் மன்னர் ஷா, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நிலையில், அவர் காலமானார். அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் தற்போது வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ஈரான் ஆட்சியாளர் அலி ஹொசைனி கமெனி பதவி விலகினால், அவர் மீதான குற்றங்களுக்கு நியாயமான சட்ட விசாரணை நடத்துவதற்கு உறுதி செய்யப்படும் என்று, அந்நாட்டின் பட்டத்து இளவரசர் ரெஸா பகலவி கூறியுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் இடையே தொடர்ந்து 11-வது நாளாக போர் நீடித்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது பற்றி இஸ்ரேல் பிரதமர் கமெனி கூறி வருகிறார். இதனால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணம், ஷா மன்னரின் வாரிசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷா மன்னரின் மகனும், பட்டத்து இளவரசருமான ரெஸா பகலவி கூறியுள்ளதாவது: ஈரான் அரசு கவிழ்ந்து கொண்டிருக்கிறது. அயதுல்லா அலி கமேனியும், அவரது கூட்டாளிகளும் வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சி மேற்கொண்டுள்ளனர். நான் கமேனிக்கு நேரடியாக ஒரு செய்தியை சொல்கிறேன்.

பதவி விலகுங்கள். அப்படி விலகினால் உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நியாயமான சட்ட விசாரணை உறுதி செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், மேலும் ரத்தக்களறியும், குழப்பமும் தான் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களால் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும், நான் அரசியல் அதிகாரத்தை எதிர்பார்க்கவில்லை ஆனால், நமது நாட்டை இந்த இக்கட்டான நேரத்தில் இருந்து மீட்டு ஸ்திரத்தன்மை, சுதந்திரம், நீதியின் வழியில் கொண்டு செல்ல உங்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று ரெஸா பகலவி தெரிவித்துள்ளார்.
English Summary
Irans Crown Prince vows fair legal trial for Khamenei if he steps down