நேபாளத்திற்கு சுற்றுலா.! பாறையில் இருந்து தவறி விழுந்து இந்தியர் பலி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பஞ்ச்தார் மாவட்டத்தில் பிரபல சுற்றுலாத் தலமான சிவா பன்ஜியாங்கில் கடந்த வெள்ளிக்கிழமை நேபாள புத்தாண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்தியா, பூடான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேபாள புத்தாண்டை கொண்டாடுவதற்காக சிக்கிம் மாநிலத்தில் வசிக்கும் கேசவ் குருங் மற்றும் அவரின் 4 நண்பர்கள் சிவா பன்ஜியாங்கிற்கு சென்றிருந்தனர். இதைத்தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்தபின், சிவா பன்ஜியாங்கிலிருந்து சனிக்கிழமை இரவு திரும்பும் போது பாறையில் இருந்து கேசவ் குருங் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து கேசவ் குருங் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திரிபுவன் பல்கலைக்கழக போதனா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து குருங்கின் நண்பர்கள் மற்றும் உடனிருந்த சுற்றுலா பயணிகளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian tourist died after Falling Off A Cliff in nepal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->