போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானுக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது - தாலிபான்கள் தகவல்..!
India has offered to help war-torn Afghanistan Taliban information
ஆப்கானிஸ்தானுக்கு உதவுவதாக இந்தியா அறிவித்துள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் தாலிபான் கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சி அமைத்ததை அடுத்து முதன் முறையாக அவர்களுடன் இந்திய குழு பேச்சு வார்த்தை நடத்தியது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய தரப்பில் இருந்து இணைச் செயலாளர் ஜெ.பி.சிங்கும் தலிபான்கள் தரப்பில் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் துணை பிரதமர் அப்துல் சலாம் ஹனாஃபியும் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை முடிந்ததை அடுத்து ஆப்கான் துணை பிரதமர் ஹனாஃபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்களுக்கு உதவிகள் வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் இருந்து இது வரை அதிகார்வ பூர்வ அறிவிப்புகள் எதுவும்வெளிவரலில்லை.
English Summary
India has offered to help war-torn Afghanistan Taliban information