பாகிஸ்தான்! ராணுவ வாகனத்தை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பாகிஸ்தான் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மிரான்ஷா எனும் பகுதியில் பாதுகாப்பு படையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு பாதுகாப்பு படையினரின் வாகனத்தை நோக்கி வந்த மர்ம நபர் திடீரென்று வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். 

இந்த வெடிகுண்டு வெடித்ததில் அங்கிருந்த மூன்று குழந்தைகளும், மூன்று இராணுவ வீரர்களும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாசஸ் ஷெரீப் அவர்கள், அப்பாவி குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் கொலை செய்தவர்களை பிடிக்கும் வரை ஓய மாட்டோம் என்றும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Human bombing in Pakistan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->