தொடரும் போராட்டம்.! ஈரான் தூதருக்கு கண்டனம் தெரிவித்தது ஜெர்மனி அமைச்சகம்.! - Seithipunal
Seithipunal


ஈரானில் ஹிஜாப்பை முறையாக அணியவில்லை என்று போலீசார் தாக்கியதில் குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த மாஷா சுமினி என்ற பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து நாடு முழுவதும் அரசுக்கு எதிராக பெண்கள், ஆண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஹிஜாப்பை எதிர்த்தும், தலைமுடியை வெட்டியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் வன்முறை மற்றும் போராட்டத்திற்கு எதிராக ஈரான் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஈரான் போராட்டத்திற்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம், ஈரான் தூதா் மஹ்மூத் ஃபராசாண்டேவை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் அதிகாரிகள் நேர்மையான மற்றும் அமைதியான போராட்டங்களை அனுமதிக்க வேண்டும் எனவும், போராட்டக்காரர்களின் மீது வன்முறை மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று ஈரான் தூதா் மஹ்மூத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

German ministry condemns Iran ambassador in person


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->