ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்.! காரணம் என்ன?
flight land in jappan for bom threat
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ அருகே நரிடா பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலையில் கியூஷி தீவில் உள்ள புகுவோவாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் தகவல் வந்தது. இதனால் பதறி போன விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த விமானம் அய்ச்சி மாகாணத்தில் உள்ள சென்ட்ரேர் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதன் பின்னர் அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கி விடப்பட்டனர்.
இதற்கிடையே விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை சோதனையிட்டனர். இருப்பினும் விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.
English Summary
flight land in jappan for bom threat