கடத்தப்பட்ட  இசைக்கலைஞர்கள் 5 பேர் படுகொலை..போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெறிச்செயல்!  - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இசைக்கலைஞர்கள் 5 பேரையும் கடத்தி அவர்களை கொன்று உடலை வனப்பகுதியில் வீசிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் அதிகமாக உள்ள வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடான  மெக்சிகோநாட்டில்  கடத்தல் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது பயங்கர மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர்.போதைப்பொருள் கடத்தல் கும்பல் அங்கு செல்பவர்களை கடத்தி செல்வதும் அவர்களை சித்திரவதை செய்து சாகடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.போலீசார் என்னதான் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினாலும் அவர்கள் கண்ணுக்குள் மண்ணை தூவி விட்டு பறந்துவிடுகின்றனர்.

இதனிடையே, அந்நாட்டின் தம்லிபாஸ் மாகாணத்தை சேர்ந்த இசைக்கலைஞர்கள் 5 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ம் ரெனொசா நகருக்கு சென்றவர்களை  போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடத்திச்சென்றது.இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கடத்தப்பட்ட இசைக்கலைஞர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின்  இசைக்கலைஞர்கள் 5 பேரையும் கடந்த வியாழக்கிழமை சடலமாக கண்டுபிடித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்  5 பேரையும் கடத்தி  கொன்று உடலை வனப்பகுதியில் வீசிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை புகழ்ந்து இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், இது கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதலை தூண்டி இதுபோன்ற கொலை சம்பவங்களை நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Five abducted musicians were murdered an act of rage by a drug trafficking gang


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->