அடுத்தடுத்து ஏற்பட்ட 7 நிலநடுக்கங்கள்.. பீதியில் மக்கள்.!!
Earthquakes in iran
ஈரான் நாட்டில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிஷ் தீவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் கிஷ் தீவை கடுமையாக தாக்கியுள்ளது. வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள துபாய், கத்தார் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.