நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!
Earthquake of 5 point 2 magnitude hits nepal
நேபாளத்தின் பஜூராவில் நேற்று 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தின் ஜும்லாவில் இருந்து 69 கிலோமீட்டர் தொலைவில் பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பஜூரா மாவட்டத்தின் பிச்சியாவைச் சுற்றி இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டது.
இதற்கு முன்னதாக ஜனவரி 24 அன்று, நேபாளத்தின் பாஜுரா மாவட்டத்தின் மேலா பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake of 5 point 2 magnitude hits nepal